மிக்கி - மௌஸ் -online

Wednesday, June 14, 2006

அழகா அசுதானந்தன் அவர்களே!!,

ஒரு தீவிரவாதிக்காக, ஒரு முதல்வர் நாடு கடந்து சென்று மனம் வருத்தப்பட்டது, நம் சரித்திரத்தில் பொனெழுத்துக்களால் பொரித்து வைக்கப் படவேண்டியது. மக்களைக் கொல்ல குண்டுவைக்கும் ஒரு தீவிரவாதி, அவனுக்கு ஒரு கட்சி, வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், சக அரசியல்வாதிக்காக அடுத்த மாநிலத்திற்கு சென்று வாதாடும் முதல்வர். சே!..... இந்தியா ஜனநாயக நாடு தானா!.... உங்களுக்கும் ஆப்கான் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம். அது சரி!, காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக அமைதிப்போராட்டத்திற்ககு உங்களை அழைத்த போது, அதை மறுத்து விட்டு ஆப்கானை இந்தியா மீது போர் தொடுக்க(!) அழைத்தவர்கள் தானே நீங்கள்! நீங்கள் எப்படி இருப்பீர்கள்.தமிழ் நாட்டு மக்கள் தண்ணீர்!! தண்ணீர்!! என்று கதறிய போது, மனம் மாறாத நீங்கள், மதானி உடல் இளைத்து விட்டான் என உருகி உருகி வருந்துவது ஆத்திரத்தை தான் தருகிறது.

உங்களின் ‘அவனை பெயிலில் விட வேண்டும்’ என்ற கேடு கெட்ட கோரிக்கைக்கும் ‘பார்க்கலாம்’ என பதிலளித்த தமிழர் தம் பெருந்தன்மையை ஒரு கணமேனும் எண்ணிப்பாருங்கள் அச்சுதானந்தன். எங்களுக்கு நீங்கள் இழைத்த கொடுமையை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் வருகிறது……., சுப்ரீம் கோர்ட் ‘கொடு’ எனக் கொடுத்த ஆணையையும் பொருட்படுத்தாமல், சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் பயன் படுத்தி முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் தடுத்த நீங்களா, ஒரு மனித மிருகத்திற்க்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்?. இந்தியாவில் மிக அதிக மழை பெரும் மாநிலங்களில் ஒன்று கேரளா. ஆனாலும் அங்கு விவசாயம் ஒன்றும் ஓகோ! என பாராட்டும் விதம்மாக இல்லை!, பாலக்காடு, இடுக்கி தவிர மற்ற பன்னிரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் மலையாகவெ இருக்கின்றன, அங்கெல்லாம், வாய்க்கல் அமைத்து விவசாயம் செய்ய முடியாது, இந்த நிலைமையில் தண்ணீரை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??. நீங்கள் உண்ணும் உணவு , மாமிசம், வாழைப் பழம் முதல் கொண்டு, உப்பு, புளி மிளகாய் வரை எதாவது உங்கள் மண்ணில் விளைகிறதா?. எல்லாவற்றுக்கும் தமிழகத்தை சார்ந்த்திருக்கும் நீங்கள் தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்பது உண்ட வீட்டுக்கு கெடு விளைவிக்கும் செயல் அல்லவா?.
இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கேரளத்து மக்களை காணலாம், அதிலும் தமிழகத்தில் மிகவும் அதிகமாக, குறிப்பாக மருத்துவமனைகளில், மிக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கேரளத்தவர் ஏராளம்!, வந்த இடத்தில் வசதியாக திருமணம் செய்து செட்டில் ஆனவர்கள் சில ஆயிரம் பேர் இருப்பர். கேரளாவில் ஆண்களைக்காட்டிலும் பொண்கள் அதிகம் என்பதால், நிறைய பணம் கொடுத்தால் தான் திருமணம் என்பது ஊரறிந்த ரகசியம். ஒரு தீப்பெட்டி முதல் அனைத்து பொருள்களும் தமிழகம் போடும் பிச்சைதானே உங்களுக்கு!. அப்படி இருக்கையில், கேரள வாழ் தமிழர்களை இழிவாக பார்ப்பதும், அவர்களை தனியாக பெயர்வைத்து அழைப்பதும் எந்த விததில் நன்றி காட்டும் செயல் ஆகும்.உங்களின் இந்த நன்றி கெட்டதனம் அடிப்படை மனிதன் முதல் அரசியல் தலைவர்கள் வரை வேரூன்றி இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.தமிழ் நாட்டில் ஒரு ‘கடை அடைப்பு’ என்றால் நீங்கள் படும் பாடு பெரும்பாடு அல்லவா?. அப்படி இருக்கையில் முல்லை பெரியார் அணையில் சில அடிகள் உயர்த்துவாதால், நீங்கள் coco-cola கம்பனிக்கும் கொடுக்கும் மில்லியன் மெட்ட்ரிக் டன் தண்ணீர் குறைந்தா போய்விடும்.!!

Saturday, June 10, 2006

படிக்கட்டு பயணங்கள்




வழக்கம் போல காலை எழுந்து வண்டியில் பறந்துக் கொண்டிருந்த போதுதான் அந்த பஸ்ஸை பார்த்தேன். முழுவதும் நிரம்பி வழிந்துக் கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அன்று நாள் முழுவதும் நான் படிக்கும் போது அந்த பஸ்ஸில் பயணம் செய்து ஸ்கூலுக்கு போனது தான் மனதில் நிழலாடியது. 30 ம் நம்பர் பஸ் என்றால் மாணவர் மத்தியில் மிகவும் பிரபலம். எங்கள் ஊரிலிருந்து சுமார் 12 கி மீ தூரத்திலிருந்த ஸ்கூலுக்கு தினம், தினம் அந்த பஸ்ஸில் தான் போவோம். காலை 8:25 க்கு இங்கும் மாலை 4:30க்கு ஸ்கூலிலும் என்பதால் எப்போதும் பயணம் அந்த பஸ்ஸில் தான். சுமார் நான்கு வருடங்களுக்கு தினம் ஒரு மணி நேரம் இந்த பஸ்ஸில் தான் கழிந்தது. காலை ட்யூசன் (tuition) முடித்துவிட்டு அவசர அவசரமாக பஸ்ஸை பிடிக்க வேண்டும். பல சந்தர்பங்களில் பஸ் புறப்பட்டுவிடும், எனவே ஒரு திருப்பத்தில் திரும்பும் போது acrobat வேலை எல்லாம் செய்து ஏற வேண்டிருக்கும். அப்போதெல்லாம் 1 முதல் 68 வரை (எங்கள் ஊரில 68 வரை தான் பஸ்கள் இருந்தன)எந்த நம்பர் பஸ் எந்த ஊருக்குச் செல்லும் என்பது கண்டக்டர்களுக்கு பின் எங்களுக்குத் தான் தெரியும். இது பற்றிய நீண்ட விவாதங்களும் பஸ் பயணத்தின் போது நடக்கும், சில சமயங்களில் கண்டக்டரிடம் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வோம்.


டவுன் பஸ்ஸில் பயணம் செய்வது என்பது எப்போதுமே சுவாரஸ்யமான அனுபவம்.அப்போது பல வகைப்பட்ட மனிதர்களை பார்க்கலாம்.25 பைசாவுக்கு சண்டை போடுவோர், டிக்கட் என்பதை ரிக்கட் எனச் சொல்லும் பல்லு போன கிழவிகள், டிக்கடே வாங்காத காலேஜ் அண்ணன்கள், தினம் தவறாமல் பெண்களுக்கு சீட் போட்டு கொடுக்கும் ரோமியோக்கள் என பல பேர், சிலர் டிக்கட் வாங்கி அதை மிக பத்திரமாக கைக்கடிகாரத்தில் சொருகி வைப்பர் (!). மாலை திரும்ப வரும் போது பெரும்பாலும் நிற்க மட்டுமே முடியும். பாதிக்கும் மேற்பட்டோர் படிகளில் தொங்கிக் கொண்டு தான் வரவேண்டி இருக்கும். அப்படி ஒரு நாள், ஒரு படிக்கட்டில் நின்ற மனிதர் ஒருவர், என் நண்பனை பார்த்து “ஏம்பா உள்ள தான் இடம் இருக்கு இல்ல~ கொஞ்சம் மேல போறது” என்றார். இவனோ கொஞ்சம் கோவப்பட்டு “அதெல்லாம் முடியாது. வேணும்னா, நீ மேல போ” ன்னு சொல்லிவிட்டான். பத்து பாஸ் பண்ணி +1 போன பிறகு தான் அவர் ஒரு தமிழ் வாத்தியார் (மேல் நிலை வகுப்பு)என்று தெரியவந்தது. அதன் பின் ஒவ்வொரு வகுப்பிலும் அவனை எழுப்பி “ பஸ் கண்டக்டர்” என அழைத்து கேள்விகள் கேட்காமல் விடமாட்டார்.

இப்போதும் அந்த வழி போகும் போதும் பழைய ஞயாபங்ங்கள் சிறகடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் முன் இருந்த குதூகலம் இல்லை. முடிந்த இளமைப் பருவம் மீண்டும் வருவதில்லை, அதனால் என்ன நினைவுகள் தானே சுகம். ஸ்கூலுக்கு பஸ் போகும் வழில் ஒரு ‘S’ வடிவ வளைவு இருக்கும், அந்த இடம் வரும் முன் அனைவரும் ஒன்றாக கண்களை மூடிக் கொண்டு வளைவில் பஸ் வளைவதை அனுபவித்து குதுகளிப்போம். சில பஸ் இல்லாத நேரங்களில் நடந்தும், வேறு பல வாகனங்களில் தொற்றிக் கொண்டும் வீடு வந்துள்ளோம். அப்படி நடந்து வரும் தருனங்களில் வழியில் உள்ள ஒற்றை மரங்களும், பாழடைந்த வீடும், பழைய மண்டபமும் எங்களின் இளைப்பாறும் இ டங்களானது. அந்த தருனங்கள் பருவ மீசை முளைக்கத்துவங்கிய வயது என்பதால் எங்களின் பேச்சுகள் பெரும்பாலும் உடன் படிக்கும் பெண்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். அப்படி ஒரு நாள் பேசியது இன்றளவும் பசுமரத்தாணி போல (எந்த பெண் என்பது உட்பட) நினைவில் உள்ளது. 30 ம் நம்பர் பஸ் எங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது, நீண்ட நாள் விடுமுறையின் போதும், கடை அடைப்பின் போதும் அந்த பஸ்ஸில் பயணம் செய்யாத தருனங்களிலும், மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி இருக்கும். சில விடுமுறை தினங்களிலும் பஸ் பயணம் செய்யாத தினங்களிலும் வழியில் பஸ்ஸை பார்க்கும் போதும் வரும் சந்தோசத்திற்கு இணையாக இப்போதெல்லாம் எந்த நிகழ்வையும் கூற முடியாது. “என்ன சார் வந்த உடனேவா?” என சக ஊழியர் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்கிறது. சற்றே சுதாரித்துக் கொண்டு “இல்ல சார், நைட் சரியா துக்கம் வரலை” என்று ஒரு பொய் கூறிவிட்டு அலுவலக மேலாளரை பார்க்க file-கட்டோடு ஓடினேன்.
விரைவில் சந்திப்போம்……………