மிக்கி - மௌஸ் -online

Wednesday, June 14, 2006

அழகா அசுதானந்தன் அவர்களே!!,

ஒரு தீவிரவாதிக்காக, ஒரு முதல்வர் நாடு கடந்து சென்று மனம் வருத்தப்பட்டது, நம் சரித்திரத்தில் பொனெழுத்துக்களால் பொரித்து வைக்கப் படவேண்டியது. மக்களைக் கொல்ல குண்டுவைக்கும் ஒரு தீவிரவாதி, அவனுக்கு ஒரு கட்சி, வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், சக அரசியல்வாதிக்காக அடுத்த மாநிலத்திற்கு சென்று வாதாடும் முதல்வர். சே!..... இந்தியா ஜனநாயக நாடு தானா!.... உங்களுக்கும் ஆப்கான் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம். அது சரி!, காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக அமைதிப்போராட்டத்திற்ககு உங்களை அழைத்த போது, அதை மறுத்து விட்டு ஆப்கானை இந்தியா மீது போர் தொடுக்க(!) அழைத்தவர்கள் தானே நீங்கள்! நீங்கள் எப்படி இருப்பீர்கள்.தமிழ் நாட்டு மக்கள் தண்ணீர்!! தண்ணீர்!! என்று கதறிய போது, மனம் மாறாத நீங்கள், மதானி உடல் இளைத்து விட்டான் என உருகி உருகி வருந்துவது ஆத்திரத்தை தான் தருகிறது.

உங்களின் ‘அவனை பெயிலில் விட வேண்டும்’ என்ற கேடு கெட்ட கோரிக்கைக்கும் ‘பார்க்கலாம்’ என பதிலளித்த தமிழர் தம் பெருந்தன்மையை ஒரு கணமேனும் எண்ணிப்பாருங்கள் அச்சுதானந்தன். எங்களுக்கு நீங்கள் இழைத்த கொடுமையை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் வருகிறது……., சுப்ரீம் கோர்ட் ‘கொடு’ எனக் கொடுத்த ஆணையையும் பொருட்படுத்தாமல், சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் பயன் படுத்தி முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் தடுத்த நீங்களா, ஒரு மனித மிருகத்திற்க்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்?. இந்தியாவில் மிக அதிக மழை பெரும் மாநிலங்களில் ஒன்று கேரளா. ஆனாலும் அங்கு விவசாயம் ஒன்றும் ஓகோ! என பாராட்டும் விதம்மாக இல்லை!, பாலக்காடு, இடுக்கி தவிர மற்ற பன்னிரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் மலையாகவெ இருக்கின்றன, அங்கெல்லாம், வாய்க்கல் அமைத்து விவசாயம் செய்ய முடியாது, இந்த நிலைமையில் தண்ணீரை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??. நீங்கள் உண்ணும் உணவு , மாமிசம், வாழைப் பழம் முதல் கொண்டு, உப்பு, புளி மிளகாய் வரை எதாவது உங்கள் மண்ணில் விளைகிறதா?. எல்லாவற்றுக்கும் தமிழகத்தை சார்ந்த்திருக்கும் நீங்கள் தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்பது உண்ட வீட்டுக்கு கெடு விளைவிக்கும் செயல் அல்லவா?.
இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கேரளத்து மக்களை காணலாம், அதிலும் தமிழகத்தில் மிகவும் அதிகமாக, குறிப்பாக மருத்துவமனைகளில், மிக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கேரளத்தவர் ஏராளம்!, வந்த இடத்தில் வசதியாக திருமணம் செய்து செட்டில் ஆனவர்கள் சில ஆயிரம் பேர் இருப்பர். கேரளாவில் ஆண்களைக்காட்டிலும் பொண்கள் அதிகம் என்பதால், நிறைய பணம் கொடுத்தால் தான் திருமணம் என்பது ஊரறிந்த ரகசியம். ஒரு தீப்பெட்டி முதல் அனைத்து பொருள்களும் தமிழகம் போடும் பிச்சைதானே உங்களுக்கு!. அப்படி இருக்கையில், கேரள வாழ் தமிழர்களை இழிவாக பார்ப்பதும், அவர்களை தனியாக பெயர்வைத்து அழைப்பதும் எந்த விததில் நன்றி காட்டும் செயல் ஆகும்.உங்களின் இந்த நன்றி கெட்டதனம் அடிப்படை மனிதன் முதல் அரசியல் தலைவர்கள் வரை வேரூன்றி இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.தமிழ் நாட்டில் ஒரு ‘கடை அடைப்பு’ என்றால் நீங்கள் படும் பாடு பெரும்பாடு அல்லவா?. அப்படி இருக்கையில் முல்லை பெரியார் அணையில் சில அடிகள் உயர்த்துவாதால், நீங்கள் coco-cola கம்பனிக்கும் கொடுக்கும் மில்லியன் மெட்ட்ரிக் டன் தண்ணீர் குறைந்தா போய்விடும்.!!

1 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home