மிக்கி - மௌஸ் -online

Saturday, May 27, 2006

சென்னையிலிருந்து ஒரு நண்பன் ---


நான் எப்போது சென்னை வந்தாலும் என் அத்தை வீட்டில் தங்குவது வழக்கம். அங்கே என் வயதொத்த அத்தை பையன்(ர்) இருப்பான். என்னை விட ஒரு வயதே பெரியவனென்றாலும் அவன் எப்போதுமே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். எதை பற்றி கேட்டலும் அதைப் பற்றி அரை மணி நேரம் பேசுவான். அவனுக்கு தெரியாத விசயமே கிடையாதா என எனக்கு எண்ணத் தோன்றும்.அவன் தான் எனக்கு கார்களின் பெயர்களை சொல்லித் தந்தான், மொபைல் போன் பின்னால் வரும் ஒளி எவ்வாறு வருகிறது என சொன்னான், சென்னை பெண்களுக்கு யார் யார் பிடிக்கும். ஒரு பெண்ணை கவர என்னென்ன வழிகள் என எல்லாவற்றையும் சொல்லுவான். எல்லாரும் துங்கிய பின்னிரவில் நாங்கள் மட்டும் இது போன்ற கதைகளை கதைத்துக் கொண்டிருப்போம்.அவன் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு போனது குறித்து மிக பெருமையுடன் சொல்லிக் கொள்வான். இது போன்ற நகரங்களில் படிக்கும் பையன்களுக்கு எல்லா விசயமும் அத்துப்படியாக இருக்கும்.ஒரு மாவட்ட தலை நகரம் கூட இல்லாத ஊரிலிருந்து வந்த என்க்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
ஒரு நாள் என்னை அவன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தான். அது ஒரு பார்-ஆக இருந்தது.அவன் குடிப்பான் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும். இதெல்லாம் தப்பில்லையாடா? எனக் கேட்டால் அதற்கும் அரை மணி நேரம் எதையாவது சொல்லி சமாளிப்பான். "சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம், சந்தர்ப்பங்கள் தவிர்ப்பது ஒழுக்கம்" என வைரமுத்து வரிகளை படித்தது சட்டென்று நினைவுக்கு வரவே நான் எழுந்து வெளியெ வந்து விட்டேன். பின்னர் வீட்டுக்கு சென்றவுடன், 'இரவுக்காட்சி படத்திற்க்கு போனோம்' என ஒரு பொய் கூறி விட்டு, அவனை காப்பற்றுவது என் வேலையாக இருந்தது. இது போல ஒருமுறை அவன் வீட்டுக்கு போனபோது மெரினா கடற்கரைக்கு கூட்டிப் போனான். சுனாமியை பத்திரிக்கையில் மட்டுமே படித்த எனக்கு, அதை பற்றி அவன் சொல்ல சொல்ல மிகவும் ஆசசரியமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது. திடீரென்று எழுந்து போனவன், வாயில் சிகெரெட்டோடு வந்தான். அவன் குடிப்பதை பார்த்த எனக்கு இது ஒன்றும் பெரிய தவறாக தோன்றவில்லை, எனவே நானும் அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை, பின் அவனாகவே இதில் 'மெந்தால்' உள்ளது, இதை பிடித்தால் வாசமே வராது என்க்கூறி என்னையும் பிடிக்கசொன்னான். அந்த சிகரெட்டை வாங்கி பற்ற வைக்க நினைத்தவன், எதோ ஒன்று தடுக்கவே கடைசி நேரத்தில் வேண்டாம் என சொல்லிவிட்டேன். பின்னர் எப்போதாவது போன் செய்து அரைமணி நேரம் பேசுவான். அவன் செய்கை ஒவ்வொன்றும் எனக்கு வியப்புட்டுவதாகவே இருக்கும். எஸ்.டி.டி எனத் தெரிந்தும் எப்படி இவனால் மட்டும் இத்தனை கதைக்க முடிகிறது என எண்ணிக்கொண்டெ அவன் சொல்ல்வத்ற்கு 'ஆமம்- சாமி' போடுவென். ஒரு முறை அவன் அக்கா கல்யாணத்தில் வைத்து ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான். அவள் பார்க்க மிக அழகாகவும், நல்ல உயரமாகவும், பழுப்பு நிற கண்களுடனும் இருந்தாள்.அவள் அணிந்திருந்த முழுவெள்ளை நிற உடை அவளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. அவள் தன்னுடன் வேலை பார்ப்பதாகவும், தன் நண்பி எனவும் சொன்னான். அன்று இரவு என்னை அவள் வீட்டில் கொண்டு விட்டு வரும்படியும் சொன்னான். எனது அப்பா-அம்மா கலியாணத்திற்கு வந்திருந்ததால் நான் போகவில்லை. அவள் போன பின் அவன் மொபைலிலிருந்து அவளுக்கு போன் செய்து என்னை பேசும்படி சொன்னான், அவள் மிக அழகான ஆங்கிலத்தில் பேசினாள். இவனை போன்றே எல்லா விசயம் குறித்தும் தெரிந்தவளாக அவள் இருந்தாள்.
பின் ஒரு நண்பனின் கலியாணத்தில் வைத்து அவன் காதலியை அறிமுகம் செய்து வைத்தான். இது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, மற்றவள் குறித்து கேட்டவுடன், ஒன்றும் கூறாமல் கண்ணடித்துவிட்டு, இது குறித்து அவன் காதலியிடம் எதுவும் கூறவேண்டாம் என சொல்லிவிட்டான். இவள் ச்ற்றே குட்டையாகவும், நிறைய பேசுபவளாகவும் இருந்தாள். வ்ழக்கம் போல நான் 'ஆமாம் சாமி' போட, அவள் அவளது குடும்பத்தை பற்றியும், இந்த காதல் அவர்களுக்குத் தெரிய வந்தால் வரும் பிரச்சனைகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தாள். பின்னாளில் இவனும் வீட்டில் காதலைச் சொல்லி கலியாணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தான். ஆனால் கலியாணச் செலவு முழுவதும் இவனுடையதாகவே இருந்தது. கலியாண நாளின் போது மற்றவள் வந்து எதோ தகராறு செய்யவே, மிகுந்த குழப்பத்திற்கிடையெ கல்யாணம் நடைபெற்றது.
இப்போது அவன் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டன். இப்பொதும் அவன் வீட்டுக்கு போனலும் மிகப்பல கதைகள் பேசுவான், இப்பொதெல்லாம் அவை எனக்கு ஆச்சரியத்தை தருவதில்லை. அது இந்த நகரத்து மக்கள் இப்படித்தான் என்று தெரிந்ததாலோ, என் கிராமமே மேல் என எனக்கு தோன்றியதாலும் இருக்கலாம்.

1 Comments:

  • //அது இந்த நகரத்து மக்கள் இப்படித்தான் என்று தெரிந்ததாலோ, என் கிராமமே மேல் என எனக்கு தோன்றியதாலும் இருக்கலாம்.//
    தலைவா.. இதெல்லாம் ஓவர்.. எல்லாத்தையும் பொதுப்படுத்த முடியாது. நகரப் பின்னணியிலிருந்து வந்தும் தனிமனித ஒழுக்கத்தைப் பேணுபவர்களையும் பார்க்க முடியும்..

    By Blogger பொன்ஸ்~~Poorna, At 22/9/06 2:48 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home