மிக்கி - மௌஸ் -online

Tuesday, January 06, 2009

அசினும் நானும் அப்பறம் ஆங்கில இலக்கியமும்...

நமக்கும் அசினுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து பிறகு சொல்கிறேன். முதலில் நமக்கும் ஆங்கில இலக்கியத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பறவைகள் பலவிதம் 4 - அஸிஸ்டன்ட் 'ஐயா', என் முதல் அனுபவம் !! ஆகிய முன்னிரு பதிவுகளில் இருந்து தெரிந்திருக்கும்.கல்லூரிக் காலத்தில் வெளிநாட்டு ஆசை தலைதூக்க, அமெரிக்கா போகும் ஆசையோடு அமெரிக்க கொடியில் செய்த T-சர்ட் போட்டுக் கொண்டும், BARRONS GRE புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தோம். ஒரு அம்மாவாசையுடன் கூடிய நல்ல நாளில் ஆங்கில இலக்கியம் படிப்பதன் மூலம், ஆங்கில அறிவு வளரும் என ஒரு பொறியியல் படிக்கும் பையன் சொல்லி வைக்க, ஆங்கில இலக்கியம் படிக்கும் ஆர்வம் மேலோங்கி வளர்ந்தது. எமக்கு தெரிந்த ஒரேயொரு ஆங்கில இலக்கியவாதி ஷேக்ஸ்பியர் தான். எனவே நமது ஆங்கில இலக்கிய அறிவு அவரில் தொடங்கியது. அவரது TWELFTH NIGHT,AS YOU LIKE IT, MIDSUMMER NIGHT'S DREAM, ROMEO AND JULIET, MERCHANT OF VENICE ஆகிய நாடகங்களை (ஒரு ஆர்வக் கோளாறில்) வாங்கி வந்து படிக்க முயற்சி செய்து, என்னதான் படித்தாலும் ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனதுண்டு.
பெரும்பாலும் 2 பக்கம் படிப்பதற்குள் தூக்கம் வந்து விடும். எனவே என் வாழ் நாளில் அதிகம் தூங்கியது இலக்கியம் படிக்கத் தொடங்கிய போது தானிருக்கும். எப்போது பார்த்தாலும் பையன் கையில் புத்தகத்துடன் தூங்கறதை பார்த்த என் பாட்டிக்கு ஏகப்பட்ட சந்தோசம் வேறு. நாடகத்தில் வரும் டையலாக் மூலம் ஒன்றுமே புரியாததால், TWELFTH NIGHT-ன் விளக்கவுரை வாங்கி வந்து அதைப் படித்து தெரிந்துக் கொண்டோம். எப்படியும் பக்கத்திற்கு பத்து முறையாவது டிக்சனரியை பார்க்க வேண்டியிருந்ததால் புத்தகத்தின் முடிவில் அதிகம் படித்தது டிக்சனரியின் பக்கங்களாகத்தானிருக்கும். விளைவு இருந்த ஆங்கில-தமிழ் டிக்சனரி கிழிந்து போய்விட்டது, பக்கங்களை பறக்க விடாமல் படிக்க அதிக கவனம் தேவையாயிருந்ததால், புதிய ஆக்ஸ்போர்ட் டிக்சனரி வாங்கி வந்தாகிவிட்டது.
இவ்வாறு ஷெக்ஸ்பியரை புரிந்துக் கொள்வது கடினம் என தெரிந்தவுடன் நமக்கு கிட்டியது SIDNEY SHELDON, என்னமா எழுதறார் (எழுதினார்!) மனுசன். புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த 3-4 மணி நேரத்தில் முடிந்து போய்விடுகிறது. well laid plans, sky is falling, rage of angels, the stranger in the mirror என வரிசையாக நாலைந்து படித்தாகிவிட்டது. பின் அடடா! நாம ஆங்கில அறிவை வளர்த்துக்கறதுக்காக இதை தொடங்கினோம்னு நியாபகத்திற்கு வர SIDNEY -க்கு BYE BYE சொல்லியாகிவிட்டது. அப்போதான் Dr. நவனீத கிருஷ்னன் -னு ஒரு பேராசியர் அறிமுகமானார். 'இவன் என்னடா எப்போ பாத்தாலும் பெரிய மேதாவி மாதிரி ஒரு புத்தகத்தை கையில் வச்சிகிட்டு சுத்தறானேன்' -னு, நம்மல கூப்பிட்டு பேசினார். அப்போதான் ஆங்கில க்ளாசிக்ஸ் பத்தி தெரிய வந்தது. CHARLES DICKENS, THOMAS HARDY, D H LAWRENCE, KAMALA DAS, GANDHI, NEHRU பத்தியெல்லாம் சொன்னார். ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில் DICKENS -வோட OLIVER TWIST 'நான் டீடைல்' படிச்சதுண்டு, ஆனா விளக்கமாக படிக்க மிக அருமையாக இருந்தது. ஒரு சின்ன பையன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்ரான்னு சொன்ன கதை! 2வது புத்தகமும் டிக்கின்ஸோடது தான், DAVID COPPERFIELD இதுவும் சின்ன பையன் கதைதான் ஆன முதல்ல சொன்னதவிட சூப்பர். அப்பறம் GREAT EXPECTATIONS ஒருவிதத்துல டிக்கின்ஸோட பையோகிராபி. Joe (கதையின் நாயகன்) அவரப் போலவே அப்பாவின் இறப்புக்கு பின் பிறந்த குழந்தை (posthumous child) அவன் வளர்றதும், படிக்கறதும், படம் வரையரதுல அவன் எப்படி ஆர்வத்தை வளர்த்துக்கிட்டான்கிறதை பத்தியும் அவர் வாழ்க்கை கதையை அப்படியே சொல்லியிருப்பார். இதுக்கு அப்பறமாதான் 'சுயசரிதை'-கள் படிக்கறதில் ஆசை வந்தது. முதல்ல படிச்சது காந்தியோட சத்திய சோதனை. இப்பவும் இந்த புத்தகம் இருபது ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பதினெட்டு மொழிகள்-ல கிடைக்குது. இது வரைக்கும் தன்னுடைய வாழ்வை இவ்வளவு வெளிப்படையாக யாருமே எழுதத் துணியவில்லை. அடுத்து படிச்சது MY STORY, கமலா தாஸோடது. இது அவங்க தன்னோட சாவுப் படுக்கையில் இருக்கும் போது எழுதனது. ஆனா அவங்களும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அவங்க சாவலை. மாறாக தன் புத்தகம் மூலம் பேரும் புகழும் வாங்கிட்டாங்க. ரொம்ப தேடி கிடைக்காத ஒரு புத்தகம் AN AUTOBIOGRAPHY, நேருவோடது. இப்போ கிடைச்சாலும் படிச்சுடுவேன். நரசிம்ம ராவின் THE INSIDER படிக்க ஆர்வமாயிருக்கும். அப்போ அருந்ததி ராயோட THE GOD OF SMALL THINGS-கு புக்கர் பரிசு கிடைச்சிருந்தது. அதுக்காக வாங்கி படிச்சு, இதுக்கெல்லாம் போய் ஏன் பரிசு கொடுத்தாங்கன்னு தோணுச்சு. MEIN CAMPH ஹிட்லரோட சுயசரிதை, கொஞ்ச காலம் இந்த புத்தகத்திற்கு தடை விதிச்சிருந்தாங்க, அதுக்காகவே தேடி புடிச்சு பழய புத்தகத்தை படிச்சது த்ரில்லா இருந்துச்சு. MY INDIA, சிஸ்டர் நிவேதிதாவோடதும் புடிச்சது, ஏன் -னா ரொம்ப சின்ன புக். அப்பறம் சமீபத்தில் படிச்சது A SIMPLE PATH, மதர் தெரேசா - வோடது, அவங்க சொல்லச் சொல்ல இன்னொருத்தர் கம்பைல் பண்ணியிருந்தாங்க, கண்டிப்பா எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இதைப் படித்தால் வாழ்க்கை பற்றிய உங்கள் கண்ணோட்டம் வேறு விதமாக மாறிவிடும். oxford publication முதல் பதிப்பு 1997 விலை 295 ரூபாய்கள்.
கதைக்கு திரும்ப வருவோம்... கிரேட் எக்ஸ்பக்டேசன்சும், PICKWICK PAPERS-ம் படிச்சதில்ல டிக்கின்ஸோட தீவிர ரசிகனாயிருந்தேன். அப்போதான் நம்ம பேராசிரியர்
"டேய் தாமஸ் ஹார்டியோட க்ளாசிக்ஸும் படி, ரொம்ப நல்லாயிருக்கும்" ன்னு சொன்னார்.
சரின்னு ஹார்டியோட THE MAYOR OF CASTERBRIDGE -ஐ தொடங்கியாச்சு. சே! வாழ்க்கைனா இவ்வளவுதானான்னு யோசிக்க வச்ச புத்தகம். அந்த புத்தகத்தை படிச்சிட்டிருந்தப்ப வெல்லாம் எனக்கே தெரியாமல் ஒரு சோகம் மனசிலே இருந்துட்டே இருக்கும். நான் மாறி போயிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்காகவே சீக்கிரம் சீக்கிரமா படிச்சு முடிச்சேன். ரொம்ப சோகமான முடிவு, ஆரம்பமும் சோகம் தான். அடுத்ததும் ஹார்டியோடதுதான், TESS of the d'Urbervilles என் ஃபேவரைட். ஒரு பொண்ணுக்கு எவ்வளவு துன்பம் வரக்கூடாதோ அவ்வளவும் TESS -க்கு வரும் ஆனாலும் தன்னுடைய குடும்பத்துக்காகவே தன்னை முழுமையாக, உயிர் உட்பட அர்பணிச்சிக்கற ஒரு பாத்திரம் அவளுடையது. அதைப் படிச்சதும் ஆங்கில பெண்கள் மேலேயே ஒரு தனி மரியாதை வந்துருச்சு. THE WOODLANDERS ஆரம்பிச்சு பாதியிலேயே நின்னுபோச்சு. அடுத்தது D H LAWRENCE -ன் SONS AND LOVERS, உண்மையிலேயே லாரன்ஸ் ஒரு 'லேடீஸ் மேன்' தான். ரொம்ப சர்ச்சைக்குள்ளான புத்தகம், ஆனாலும் ரொம்ப இன்ரஸ்டிங்கா எழுதியிருப்பார். புத்தகத் தலைப்புக்காக படித்தது பெர்னாட்ஷாவின் THE DOCTORS DILEMMA, எரிக் செகலின் DOCTORS. செகலின் LOVE STORY நல்லாயிருந்தது டிக்கின்ஸின் THE TALE OF TWO CITIES-ம் jane austin -ன் PRIDE AND PREJUDICE -ம் பாதியிலேயே விட்டாச்சு, வாய்ப்பு கிடைச்சா இதெல்லாத்தையும் முழுசா படிச்சிடனும்.நம்ம அப்துல் கலாம் எழுதியது, WINGS OF FIRE -ம், INDIA 2020-ம் ஈடு இணையே இல்லை.
அப்பறம் படிச்சது சல்மான் ருஸ்டியின் THE MIDNIGHT CHILDREN, ஆனால் முடிக்க முடியலை. நம்ம குஷ்வந்தின் THE COMPANY OF WOMEN நல்லாயிருந்தது. நடுநடுவே கொசுறு நாவல் படிச்சாலும் நினைவில் நின்னது டான் ப்ரவுனின் THE DAVINCI CODE - ம், DIGITAL FORTRESS - ம் முன்னதை ஒப்பிட்டு பார்க்கும் போது பின்னது ஒன்றுமேயில்லை.இப்போவெல்லாம் greece, Robin sharma ன்னு படிச்சாலும் க்ளாசிக்ஸ் படிச்சப்போ இருந்த பிடிப்பு மற்ற எதிலேயும் இல்லை.
அப்பறம் அசினுக்கும் நம்மைப் போலவே ஆங்கில இலக்கியம் பிடிக்குமாம், என்பது மட்டுமல்லாமல், இரண்டு பேருக்கும் பிறந்த தினம் ஒரே நாள் தான். இது குறித்து அசின் மிகவும் சந்தோசமும், பெருமையும் அடைந்ததாக ஒரு கேள்வி.

2 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home